» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஸ்பிக் - கிரீன்ஸ்டார் நிறுவனத்தில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா

சனி 15, மார்ச் 2025 10:13:39 AM (IST)



தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில் 54வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா  நடைபெற்றது. 

தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில் 54வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழாவினை வஉசி துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் கேப்டன் கிங்ஸ்டன் நீல் துரை, தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார கொடியேற்றி துவக்கிவைத்தார். மேலும் அவர் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு பொருட்காட்சியையும் அவர் துவக்கிவைத்தார். அவரது தலைமையில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

நிறைவு விழாவிற்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், இணை இயக்குனர், தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் பாலு, க்ரீன்ஸ்டர் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் செந்தில் நாயகம், ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழாவினையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors



CSC Computer Education




Thoothukudi Business Directory