» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இறந்த பெண்ணின் உடலில் இருந்த நகை திருடிய வாலிபர் கைது: துக்க வீட்டில் கைவரிசை!
சனி 15, மார்ச் 2025 8:52:36 AM (IST)
ஏரல் அருகே துக்க வீட்டில் இறந்த பெண்ணின் உடலுக்கு மாலை அணிவிப்பது போன்று நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் முரசொலி மாறன். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (30). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மகேஸ்வரி கடந்த 12-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நேற்று முன்தினம் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அவரது உடலில் அணிந்திருந்த நகைகளை உறவினர்கள் கழற்ற முயன்றனர்.
அப்போது மகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5¾ பவுன் தாலி சங்கிலி மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து முரசொலி மாறன் மஞ்சள் கயிற்றால் மனைவிக்கு தாலி அணிவித்த பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
துக்க வீட்டில் மனைவியின் தாலி சங்கிலி மாயமானது குறித்து முரசொலி மாறன் ஏரல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், துக்க வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் ஏரல் அருகே கணபதிசமுத்திரத்தைச் சேர்ந்த தங்கத்துரை மகன் தொழிலாளியான கொழுந்துவேல் (38) என்பவரை உதவிக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.
மகேஸ்வரியின் உடலை உறவினர்கள் குளிப்பாட்டி புது துணி உடுத்திய பின்னர் பிரீசரில் தூக்கி வைத்தபோது, அவர்களுக்கு உதவி செய்வது போன்று நடித்த காெழுந்துவேல், மாலை அணிவித்தபோது நகையை நைசாக திருடியது தெரிய வந்தது. எனவே, கொழுந்துவேலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த நகையை மீட்டனர். பின்னர் அவரை ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)
