» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விண்வெளி தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
சனி 15, மார்ச் 2025 8:45:40 AM (IST)
விண்வெளி தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கொட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் "எங்கள் பகுதியில் உள்ள ஆதியாக்குறிச்சியில் தமிழக அரசு சார்பில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஆதியாக்குறிச்சி பகுதியில் ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்காக 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் விண்வெளி தொழில் பூங்காவுக்கும் இதே பகுதியில் நிலங்களை கையகப்படுத்தினால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இதுகுறித்து பொதுமக்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் முறையான விளக்கம் அளிக்கவில்லை. எனவே மக்களுக்கு மறுகுடியமர்வு உள்ளிட்ட மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி தராமல் விண்வெளி தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தெரிவிக்கும் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தமிழக தொழில் துறை செயலாளர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)
