» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெறிநாய்கள் கடித்து குதறியதில் 30 ஆடுகள் பலி
சனி 15, மார்ச் 2025 8:27:26 AM (IST)
பேய்க்குளம் அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
தூத்துக்குடி மாவட்டம், வடக்கு பேய்க்குளம் கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சோ்ந்த பிச்சையா மகன் இசக்கிமுத்து (40), பெட்டைகுளம் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து ஆகியோா் கள்ளியடைப்பு பகுதியில் ஆட்டுக்கிடை அமைத்து சுற்றி முள்வேலியிட்டு பராமரித்து வந்தனா். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஆட்டுக்கிடைக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆட்டுக்குட்டிகள் மற்றும் ஆடுகளை கடித்து குதறினவாம்.
இதில், 25 குட்டிகள் இறந்தன. 2 குட்டிகளை காணவில்லையாம். இதேபோல இசக்கிமுத்து அமைத்திருந்த ஆட்டுக்கிடையில் 4 குட்டிகள் இறந்து கிடந்தனவாம். இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனா். மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு தர வேண்டும், வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் : காவல்துறை நடவடிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி : மனைவி கண் முன்னே பரிதாபம்
திங்கள் 17, மார்ச் 2025 9:39:32 PM (IST)

தூத்துக்குடி - திருச்சி புதிய விமான சேவை 30ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு
திங்கள் 17, மார்ச் 2025 9:30:03 PM (IST)

நண்பகலில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுப்படுத்த கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:08:17 PM (IST)

தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பரிதாப சாவு!
திங்கள் 17, மார்ச் 2025 8:02:02 PM (IST)

டாஸ்மாக் விவகாரம் : தூத்துக்குடியில் தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - 81 பேர் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 7:51:51 PM (IST)
