» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெறிநாய்கள் கடித்து குதறியதில் 30 ஆடுகள் பலி

சனி 15, மார்ச் 2025 8:27:26 AM (IST)

பேய்க்குளம் அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு பேய்க்குளம் கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சோ்ந்த பிச்சையா மகன் இசக்கிமுத்து (40), பெட்டைகுளம் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து ஆகியோா் கள்ளியடைப்பு பகுதியில் ஆட்டுக்கிடை அமைத்து சுற்றி முள்வேலியிட்டு பராமரித்து வந்தனா். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஆட்டுக்கிடைக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆட்டுக்குட்டிகள் மற்றும் ஆடுகளை கடித்து குதறினவாம்.

இதில், 25 குட்டிகள் இறந்தன. 2 குட்டிகளை காணவில்லையாம். இதேபோல இசக்கிமுத்து அமைத்திருந்த ஆட்டுக்கிடையில் 4 குட்டிகள் இறந்து கிடந்தனவாம். இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனா். மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு தர வேண்டும், வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory