» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டல் ஊழியருக்கு அரிவாள் வெட்டு : 2பேர் கைது

சனி 8, மார்ச் 2025 8:49:18 AM (IST)

தூத்துக்குடியில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டியதாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சோலைபுரத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் இசக்கிராஜ் (31). இவர், தூத்துக்குடி காதர்மீரான் நகரில் தங்கியிருந்து தெர்மல் நகர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைசெய்து வருகிறார். இந்நிலையில், உணவகத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் நேற்று முன்தினம் வந்து சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றாராம். 

இதைத் தட்டிக்கேட்ட இசக்கிராஜை, மணிகண்டன், தனது நண்பர் சரவணன்(29) என்பவருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியதுடன், பொருள்களை சேதப்படுத்திவிட்டு தப்பினாராம். இதில் பலத்த காயமடைந்த இசக்கிராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டன், சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மணிகண்டன் மீது 6 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory