» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓட்டல் ஊழியருக்கு அரிவாள் வெட்டு : 2பேர் கைது
சனி 8, மார்ச் 2025 8:49:18 AM (IST)
தூத்துக்குடியில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டியதாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சோலைபுரத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் இசக்கிராஜ் (31). இவர், தூத்துக்குடி காதர்மீரான் நகரில் தங்கியிருந்து தெர்மல் நகர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைசெய்து வருகிறார். இந்நிலையில், உணவகத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் நேற்று முன்தினம் வந்து சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றாராம்.
இதைத் தட்டிக்கேட்ட இசக்கிராஜை, மணிகண்டன், தனது நண்பர் சரவணன்(29) என்பவருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியதுடன், பொருள்களை சேதப்படுத்திவிட்டு தப்பினாராம். இதில் பலத்த காயமடைந்த இசக்கிராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டன், சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மணிகண்டன் மீது 6 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










