» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20லட்சம் மதிப்புள்ள ரோல் வெடிகள் பறிமுதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 7, பிப்ரவரி 2025 7:57:48 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள ரோல் வெடிகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன், ஆகியோர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது அதில், குழந்தைகள் பொம்மை துப்பாக்கிளில் வைத்து வெடிக்கும் ரோல் வெடிகள் இருப்பதும், இதனை மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வெடிகளை போலீசார் கைப்பற்றி சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 இலட்சம் ஆகும். இது தொடர்பாக தப்பியோடிய கடத்தல் கும்பலை கியூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










