» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அஞ்சலக அடையாள அட்டை பெற அழைப்பு!
சனி 21, டிசம்பர் 2024 12:15:05 PM (IST)
அஞ்சலக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்களில் ‘அஞ்சலக அடையாள அட்டை’ எனும் சேவை மூலம் பொதுமக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்திய மாநில அரசின் பல்வேறு துறையின் நலத்திட்டங்களைப் பெற சான்றை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்திய அஞ்சல் துறையானது பொதுமக்களுக்கு அவர்களின் முகவரியை அங்கீகரிக்கும் வண்ணம் ‘அஞ்சலக அடையாள அட்டை’ எனும் சேவையை வழங்கி வருகிறது.
இந்த சேவையைப் பொதுமக்கள் அருகிலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த அடையாள அட்டையானது தேர்தல் கமிஷன், அகப்பெயருள் விநியோகம், நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழக போலிசாரால் முகவரி சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. புதிதாக இடம் பெயர்ந்து புதிய முகவரிக்குச் செல்பவர்கள் தங்கள் புதிய முகவரியை பல்வேறு ஆவணங்களில் மாற்ற மேற்கொள்ளும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகிலுள்ள அஞ்சலகத்தில் ரூ 20/-செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். அடையாள அட்டைப் பெறுவதற்கான கட்டணம் ரூ.250/- ஆகும். இந்த அட்டை மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூ.100/- செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் ஆதாரில் முகவரி மாற்றத்திற்கு இந்த அஞ்சலக அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சல் துறையின் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










