» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழை வெள்ளத்தில் மூழ்கிய 5000 ஏக்கர் பயிர்கள் : விவசாயிகள் வேதனை
ஞாயிறு 15, டிசம்பர் 2024 2:33:24 PM (IST)

விளாத்திகுளம் அருகே மழை வெள்ளத்தில் 5000 ஏக்கர் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள P. ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம், புதுசின்னையாபுரம், மாதலாபுரம், பூதலாபுரம், சேர்வைக்காரன்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி, கட்டை தலைவன் பட்டி, சென்னம்பட்டி, துரைச்சாமிபுரம், குமாரலிங்கபுரம், மாவிலோடை, சின்னூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்தாண்டு மானாவரி நிலத்தில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், வெங்காயம், உளுந்து, பாசி, கம்பு மக்காசோளம் உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
மேலும், விளைநிலங்கள் முழுவதிலும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இப்பகுதிகளில் உள்ள நீர்வரத்து ஓடைகளை முறையாக தூர்வாராதது மற்றும் பராமரிப்பு செய்யாததன் காரணத்தினால் தான் மழை வெள்ளநீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நீர்வரத்து ஓடைகளை முறையாக தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










