» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி

திங்கள் 21, அக்டோபர் 2024 7:42:54 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு” குறித்த ஒரு நாள் பயிற்சி இன்று நடைபெற்றது. 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலமாக "நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு” என்னும் தலைப்பில் இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர்  ப. அகிலன் பயிற்சியை தொடங்கி வைத்தார். 

பல்வேறு முக்கியமான பாடங்களான நன்னீர் அலங்கார மீன் இனங்கள், முட்டை மற்றும் குட்டி ஈனும் அலங்கார மீன் இனங்களின் இனப்பெருக்கம், நீர்த்தரக்கட்டுப்பாடு, செயற்கை உணவு தயாரித்தல், நோய் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் குறித்த தொழில் நுட்பங்கள் கற்பிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 14 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியில் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (பொறுப்பு)  கோ. அருள் ஓளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். உதவிப்பேராசிரியர்கள் (ஓ) பூ. மணிகண்டன் மற்றும் ம. கீதா ஆகியோர் பயிற்சியை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory