» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கிய நாள்: வஉசிக்கு மரியாதை செலுத்த இந்து முன்னணி கோரிக்கை!
சனி 21, செப்டம்பர் 2024 11:06:14 AM (IST)
தூத்துக்குடி துறைமுகத்தில் சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கிய நாளான அக்.16ஆம் தேதி வ.உ.சி., சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்து முன்னணி அமைப்பின் கிளை அமைப்பான இந்து வியாபாரிகள் நல சங்கம் தமிழ்நாடு வ.உ. சிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கிய நாளான வருகின்ற 16.10.2024 புதன்கிழமை அன்று துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு இந்து வியாபாரி நலச்சங்க மாநில தலைவர் வி.பி. ஜெயக்குமார் மற்றும் இந்து முன்னணி மாநில செயலாளர் மத்திய அரசு வழக்கறிஞர் குற்றாலநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
இந்த நிலையில், வ.உ.சி., சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி வேண்டி தூத்துக்குடி துறைமுக அதிகாரியிடம் இந்து முன்னணி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார் ஆகியோர் மனு அளித்தனர். இந்து முன்னணி ஆதரவாளர்கள் சரவணாஸ் ஹோட்டல் உரிமையாளர் செந்தில் ஆறுமுகம், திருநாவுக்கரசு ஆகியோர உடனிருந்தனர்.