» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துறைமுக வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 9:22:30 PM (IST)
இந்தியா முழுவதும் நாளை 12 துறைமுகங்களில் நடைபெற இருந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மத்திய கப்பல் துறை அமைச்சகம் தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் சமூக தீர்வு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை காலை வழக்கம் போல் வேலைகள் நடக்கும் என்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகிகள் அறிவித்தனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை முன்னிட்டு தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் பழைய துறைமுக வாயிலில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யு.சி அமைப்பு செயலாளர் கதிர்வேல், ஜனநாயக ஊழியர் சங்க தலைவரும், லேபர் டிரஸ்டியுமான பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் காசி, துணைத்தலைவர் ரசல், எச்.எம்.எஸ் தலைவர் சுரேஷ், எச்.எம்.எஸ் (ஒர்க்கர்ஸ்) தலைவர் ஜான்கென்னடி, பெட் யூனியன் பொதுச் செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.