» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நான் முதல்வன் திட்டத்தில் மதர் தெரசா பொறியியல் கல்லூரி சாதனை: தமிழக அரசு பாராட்டு

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 8:06:19 PM (IST)



தூத்துக்குடி வாகைகுளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரிக்கு நான் முதல்வன் திட்டத்தில் அதிகபட்ச வேலைவாய்ப்பு பெற்றமைக்கு சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி சிறப்பாக செயல்பட்டது. மேலும் கல்லூரியின் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத ஆதரவிற்காகவும், அரசின் திட்டங்களை உயர்ந்த அளவில் செயல்படுத்துவதற்கும் உறுதுணையாக செயல்பட்டதற்கும், தமிழக அரசின் பயிற்சி மற்றும் வளர்ச்சி துறை கழக மேலாண்மை இயக்குநர் இன்னொசென்ட் திவ்யா, ஐ ஏ.எஸ். பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். 

இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதற்காக பாடுபட்ட கல்லூரி முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமசாமி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை பேராசிரியர் ரீகன்,பாலின் விசு, மற்ற துறை பேராசிரியர்கள், நிர்வாக மேலாளர் விக்னேஷ் ஆகியோரை ஸ்காட் கல்விக்குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:09:28 PM (IST)

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory