» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வங்கதேச இந்துக்களுக்கு நீதி கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 5:52:54 PM (IST)
வங்கதேச இந்துக்களுக்கு நீதி கோரி தூத்துக்குடி, கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், இந்து கோயில்கள் மற்றும் வீடுகளை தீக்கிரை யாக்கிடுவதைக் கண்டித்தும் அங்கு வாழும் பூர்வீக இந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் விபி ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடியில்...
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் டூவிபுரம் 5வது தெருவில் வைத்து இந்து முன்னணி மேற்கு மண்டல தலைவர் சுதாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதிநாத ஆழ்வார், செயலாளர் சரவணகுமார், பொதுச்செயலாளர் நாராயணராஜ், செயற்குழு உறுப்பினர் பலவேசம், சீதாராமன் வென்னிமலை, இந்து ஆட்டோ முன்னணி மணிவண்ணன், மாரியப்பன், திருப்பதி வெங்கடேஷ், பட்டாணி, ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன், இந்து இளைஞர் முன்னணி கவி சண்முகம், பாஜக கூட்டுறவுத்துறை மாவட்டத் துணைத் தலைவர் சந்தன குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.