» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிச்சென்ற 27 டிராக்டர்கள் பறிமுதல்: டிஎஸ்பி அதிரடி
திங்கள் 19, ஆகஸ்ட் 2024 4:11:42 PM (IST)

கடம்பாகுளத்தில் இருந்து டிராக்டர்களில் அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிச்சென்ற 27 டிராக்டர்களை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பா குளத்தில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் அல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கடம்பாக்குளத்தில் இருந்து நீர்வளத் துறையினரின் உரிய அனுமதி சீட்டு இன்றி டிராக்டர்களில் வண்டல் மண் அள்ளி ஆழ்வார்திருநகரி பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை குளங்களிலிருந்து மண் அள்ளப்படுவதில்லை என்பதால் செங்கல் சூளைகளுக்கு எதிரே நெல்லை திருச்செந்தூர் சாலை ஓரத்தில் நீண்ட வரிசையில் சனிக்கிழமை இரவில் 30க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் விபத்தை ஏற்படுத்தும் விதமாக நிறுத்தப்பட்டிருந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது கடம்பா குளத்தில் இருந்து 27 டிராக்டர்களில் மண் அள்ளி செங்கல் சூளைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படி போலீசார் 27 டிராக்டர்களின் பறிமுதல் செய்து ஆழ்வார் திருநகரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விவசாயத்திற்கு மண் அள்ள கடம்பா குளத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் உரிய அனுமதி சீட்டு இன்றி ஒரே நேரத்தில் 27 டிராக்டர்கள் செங்கல் சூளைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











JohnAug 19, 2024 - 07:43:29 PM | Posted IP 162.1*****