» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அஞ்சலங்களில் பொது சேவை மையம்

புதன் 29, மே 2024 4:19:45 PM (IST)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் பொதுமக்களுக்காக பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் "பொது சேவை மையம்"  செயல்படுகிறது.

இது தொடர்பாக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி கோட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம்  ஆகிய மூன்று தலைமை அஞ்சல் அலுவலகங்கள் உட்பட அனைத்து துணை அஞ்சலகங்களிலும் CSC என்னும் பொது சேவை மையம் செயல்படுகிறது. இந்த பொது சேவை மையங்களின் மூலம் பொதுமக்கள் பின் வரும் சேவைகளை எளிதாக பெறலாம். 

மின் கட்டணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ், லேண்ட்லைன் கட்டணம்/பிராட்பேண்ட் கட்டணம் / DTH ரீசார்ஜ், LIC பாலிசி / பிற தனியார் இன்சூரன்ஸ்  பிரீமியம், விமான மற்றும் பேருந்து  பயணசீட்டு முன்பதிவு, FASTAG பில்  செலுத்துதல், ஜீவன் பிரமான், ஓய்வூதியர் சான்று, பான் கார்டு விண்ணப்பம், பாஸ்போர்ட் விண்ணப்பம், தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS), பயிர் காப்பீட்டு திட்டம் (PMFBY),  மற்றும் பல சேவைகளை பெற  அஞ்சலகங்களை அணுகி பயனனடயுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

m.sundaramமே 29, 2024 - 09:19:46 PM | Posted IP 162.1*****

Very good service. It is to be extended to LSG SOs in a phased manner since most the customers are in villages.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory