» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 11ல் துவக்கம் - ஆட்சியர் தகவல்

செவ்வாய் 14, மே 2024 3:55:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி 11.06.2024 முதல் 21.06.2024 வரை வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 1433 ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 11.06.2024 முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவர்களுக்கெதிரே குறிப்பிடப்பட்ட நாட்களில் பிரதி தினம் காலை 10.00 மணிக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

1. எட்டயபுரம் வட்டம்: மாவட்ட ஆட்சித் தலைவர், தூத்துக்குடி. 11.06.2024 முதல் 21.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

2. ஏரல் வட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர், தூத்துக்குடி. 11.06.2024 முதல் 20.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

3. ஸ்ரீவைகுண்டம் வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் தூத்துக்குடி 11.06.2024 முதல் 19.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

4. சாத்தான்குளம் வட்டம்வருவாய் கோட்டாட்சியர் திருச்செந்தூர் 11.06.2024 முதல் 14.06.2024 முடிய

5. விளாத்திகுளம் வட்டம்வருவாய் கோட்டாட்சியர், கோவில்பட்டி 11.06.2024 முதல் 21.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

6. திருச்செந்தூர் வட்டம்மாவட்ட வருவாய் அலுவலர் (இஸ்ரோ), தூத்துக்குடி 11.06.2024 முதல் 18.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

7. கயத்தார் வட்டம்உதவி ஆணையர் (கலால்) தூத்துக்குடி 11.06.2024 முதல் 21.06.2024 முடிய(திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

8. தூத்துக்குடி வட்டம்மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், . தூத்துக்குடி 11.06.2024 முதல் 18.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

9. கோவில்பட்டி வட்டம்: தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), தூத்துக்குடி 11.06.2024 முதல் 18.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

10. ஓட்டப்பிடாரம் வட்டம்தனித்துணை ஆட்சியர் (இஸ்ரோ), தூத்துக்குடி 11.06.2024 முதல் 21.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை, அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory