» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் போட்டி: தூத்துக்குடி, விளாத்திகுளம் அணிகள் வெற்றி!

திங்கள் 4, மார்ச் 2024 3:25:12 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் அணியும், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி அணியும் வெற்றி பெற்றது.

துத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவி க்கிறார் ஊழிய நிறுவனத் தின் ஏலீம் விளையாட்டுத் திடலில் 2 நாள்கள்  தூத்துக் குடி மாவட்ட சீனியர் ஆண், பெண் 38-வது மாவட்ட சாம் பியன் ஷிப்க்கான கபாடி போட்டி நடைபெற்றது.ஆண் களுக்கான கபடிபோட்டியை நாலுமாவடி இயேசு விடுவி க்கிறார்ஊழியபொதுமேலா ளர் செல்வக்குமார்  துவக்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் பெண்கள் பிரி வில் 12 அணிகளும் விளை யாடியது. ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் அணிமுதல் இடத்தையும் பெண்கள் பிரிவில் தூத்துக்குடி அணி முதலிடத்தையும் பெற்றது.     
           
போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள் அணிக்கு முதல்பரிசான ரூ.50,000-ம் மற்றும் கோப்பையை தூத் துக்குடி அணியும், 2-வது பரிசான ரூ.30,000-ம் மற்றும் கோப்பையை கோவில்பட்டி அணியும், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசான ரூ.20,000 -த்தை ஓட்டப்பிடாரம், புன்ன க்காயல்அணிகளும்மற்றும் கோப்பைகளையும் தூத்துக் குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண்கள் அணிக்கு முதல்பரிசான ரூ.50,000-ம் மற்றும் கோப்பையை விளா த்திக்குளம் அணியும், 2-வது பரிசான ரூ.30,000-ம் மற்றும் கோப்பையை ஓட்டப்பிடாரம் அணியும், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசான ரூ.20,000 -த்தை கயத்தார், ஸ்ரீவைகு ண்டம் அணிகளும் மற்றும் கோப்பைகளையும்திருச்செ ந்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், தமிழக மீன் வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.இராதாகிருஷ் ணன் வழங்கினார்.

பரிசளிப்பு விழாவில் கபடி கழகச் செயலாளர் கிறிஸ் டோபர்ராஜன் வரவேற்று பேசினார்.முன்னாள் பாரா ளுமன்றஉறுப்பினர்ஏ.டி.கே. ஜெயசீலன், மாநில மகளிர் அணி துணைச் செயலாள ரும்,மானாமதுரைசட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ். ஆர்.எஸ்.உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், வழக்கறிஞர் செல்வக்குமார், ஆழ்வார்தி ருநகரி யூனியன் சேர்மன் ஜனகர்,ஆத்தூர்சதீஷ்குமார் எஸ்.ஜே.ஜெகன், சாகுல் ஹமீது, இசக்கி பாண்டியன் கபடி கந்தன்,ஒன்றிய திமுக பொருளாளர் பாதாளமுத்து, மாவட்ட பிரதிநிதி கலைய ரசு, ஓய்யான்குடி கிளைக் கழகச் செயலாளர் கிருபை ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமைச் சூர் கபடிக் கழகத் தலைவர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் தலைமையில் சேர்மன் சகோ.மோகன் சி.லாசரஸ் முன்னிலையில் செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன், பொருளாளர் ஜிம்ரீவ்ஸ், ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருதுபெற்ற கப டிவீரர் மணத்தி கணேசன், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக்கழக நடுவர் குழு சேர்மன் கண்ணன், கன்வீனர் மைக்கேல் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory