» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆற்று மணல் திருடிய 2 பேர் கைது : பைக் பறிமுதல்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 3:54:47 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆற்று மணல் திருடிய 2 பேரை போலீசார் கதைு செய்து, திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்தோப்பு தாமிரபரணி ஆற்று பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் சண்முகம் (26) மற்றும் ஸ்ரீவைகுண்டம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் கண்ணன் (41) ஆகியோர் என்பதும் அவர்கள் இருசக்கர வாகனத்தின் மூலம் சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 25 மூட்டை ஆற்று மணல் மற்றும் திடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










