» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆற்று மணல் திருடிய 2 பேர் கைது : பைக் பறிமுதல்!

வெள்ளி 1, டிசம்பர் 2023 3:54:47 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆற்று மணல் திருடிய 2 பேரை போலீசார் கதைு செய்து, திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்தோப்பு தாமிரபரணி ஆற்று பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் சண்முகம் (26) மற்றும் ஸ்ரீவைகுண்டம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் கண்ணன் (41) ஆகியோர் என்பதும் அவர்கள் இருசக்கர வாகனத்தின் மூலம் சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 25 மூட்டை ஆற்று மணல் மற்றும் திடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory