» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தின பேரணி!

வெள்ளி 1, டிசம்பர் 2023 10:44:00 AM (IST)



தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி, ரெட் ரிப்பன் கிளப் மற்றும் ஏஆர்டி மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரணியை அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ முதல்வர் சிவக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "சுய ஒழுக்கம் இதில் முக்கியமானது. இந்த சமூகத்தில் எய்ட்ஸ் நோய் தொற்று கிருமி பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மருத்துவத்துறை பேராசிரியர் ராஜவேல் முருகன், உதவி உறைவிட மருத்துவர் கரோலின், ஏஆர்டி மைய மருத்துவர்கள் சூர்யா பிரதீபா, குழந்தைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி மருத்துவமனை வளாகத்தில் இருந்து துவங்கி வஉசி கல்லூரி வரை நடைபெற்றது. மருத்துவமனை ரெட் ரிப்பன் கிளப் மைய அலுவலர் ஹரி, மாணவர்கள், செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory