» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:37:02 AM (IST)
தூத்துக்குடியில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து ரூ.22ஆயிரம் பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜபிரபு என்பவரது மனைவி அஜிதா (36). இவர் மணிநகர் பகுதியில் அழகு நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 29.11.2023 அன்று மேற்படி அழகு நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு ரூபாய் 22,000/- பணம் திருடுபோயுள்ளது.இதுகுறித்து புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேல தட்டாப்பறை வடக்கு தெருவைச் சேர்ந்த மருதன் மகன் சுடலைமணி (53) என்பவர் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கியப்பன் அவரை கைது செய்தார்.
இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுடலைமணி மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 5 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என மொத்தம் 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










