» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!

வெள்ளி 1, டிசம்பர் 2023 10:37:02 AM (IST)

தூத்துக்குடியில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து ரூ.22ஆயிரம் பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜபிரபு என்பவரது மனைவி அஜிதா (36). இவர் மணிநகர் பகுதியில் அழகு நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 29.11.2023 அன்று மேற்படி அழகு நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு ரூபாய் 22,000/- பணம் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேல தட்டாப்பறை வடக்கு தெருவைச் சேர்ந்த மருதன் மகன் சுடலைமணி (53) என்பவர் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  இசக்கியப்பன் அவரை கைது செய்தார். 

இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுடலைமணி மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 5 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என மொத்தம் 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory