» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.40லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு: ஒருவர் கைது!

வெள்ளி 1, டிசம்பர் 2023 10:29:42 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள லாரியை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சரள் மணல் ஏற்றி வந்த லாரி விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.40லட்சம் ஆகும். இதுகுறித்து ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் வன்னிராஜ் மகன் ராஜா கணேஷ் (30) என்பவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி முள்ளக்காடு நேரசமணி நகரைச் சேர்ந்த தொம்மை மகன் லோகேஷ் (27) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் ஜெயக்குமார் என்பவரை தேடி வருகின்றனர். இது தொடர்பாக  புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory