» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது : 5 சவரன் நகை மீட்பு!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:21:15 AM (IST)
தூத்துக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் செயினை பறித்தவரை போலீசார் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த சாமி மனைவி பாப்பா (64) என்பவர் நேற்று டி.சவேரியார்புரம் சமுதாயகூடம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது அங்கு சைக்கிளில் வந்த மர்ம நபர் பாப்பா அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார்.இதுகுறித்து பாப்பா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் மரியஇருதயம், சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் முதல் நிலை காவலர் சத்ரியன் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஜேசுபாலன் (42) என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் வழக்குபதிவு செய்து ஜேசுபாலனை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.2.5லட்சம் 000/- மதிப்புள்ள 5 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










