» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது : 5 சவரன் நகை மீட்பு!

வெள்ளி 1, டிசம்பர் 2023 10:21:15 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் செயினை பறித்தவரை போலீசார் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த சாமி மனைவி பாப்பா (64) என்பவர் நேற்று டி.சவேரியார்புரம் சமுதாயகூடம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது அங்கு சைக்கிளில் வந்த மர்ம நபர் பாப்பா அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து பாப்பா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்  மணிமாறன் தலைமையில்  உதவி ஆய்வாளர் மரியஇருதயம், சிறப்பு உதவி ஆய்வாளர்  சுடலைமுத்து  மற்றும் முதல் நிலை காவலர் சத்ரியன் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஜேசுபாலன் (42) என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் வழக்குபதிவு செய்து ஜேசுபாலனை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.2.5லட்சம் 000/- மதிப்புள்ள 5 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory