» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 3பேர் கைது!

வெள்ளி 1, டிசம்பர் 2023 8:06:04 AM (IST)

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக டீக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பழைய மாநகராட்சி அலுவலக பகுதியில்ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் ஆய்வு செய்தபோது, அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளா் பகவதியை (51) போலீஸாா் கைது செய்தனா். மேலும், கடையிலிருந்து 322 புகையிலை பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

பேய்க்குளம் 

சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பேய்க்குளத்தை அடுத்த சாலைப்புதூரில் குணசேகா் (56) என்பவரது பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 8 பாக்கெட் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தட்டாா்மடம் 

தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பொத்தகாலன்விளையில் சோதனை நடத்தினா். அப்போது, அந்தோணி பாஸ்கரன் என்பவரது கடையிலிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory