» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு உரிமை இல்லை: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:51:56 AM (IST)
அதிமுக குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு தாா்மிக உரிமை இல்லை என்று முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ. தெரிவித்தார்.
கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியது: வடகிழக்குப் பருவமழையால் கயத்தாறு வட்டம், கழுகுமலை குறுவட்டம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில், விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடைபெறும்.குமாரபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தொடா்பான மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறியதால் 20 நாள்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் போராடி வருகின்றனா். அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், மக்களைத் திரட்டி போராட்டம் நடைபெறும்.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறக்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துகிறது. காமநாயக்கன்பட்டியில் கட்டப்பட்ட வீரமாமுனிவா் மணிமண்டபம், கயத்தாறு வட்டம் தலையால்நடந்தான்குளம், சால்நாயக்கன்பட்டி ஊராட்சிகளில் தாட்கோ மூலம் ரூ. 86 லட்சத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபங்கள் ஆகியவை திறக்கப்படவில்லை.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவா்கள், மருந்துகள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனா். அமைச்சா் மா. சுப்பிரமணியனை மாற்ற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிடிவி தினகரன் வேறு கட்சி தொடங்கி செயல்படுகிறாா். எனவே, அவருக்கு அதிமுக பற்றிப் பேச தாா்மிக உரிமையில்லை. தேமுதிக தலைவா் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










