» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேர் கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 9:43:04 PM (IST)
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கந்தன் காலனி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் லெட்சுமணன் (40) என்பவர் நேற்று இரவு அவரது வீட்டிற்குள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 1500/- பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து லெட்சுமணன் இன்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சரவணன் (19) மற்றும் தூத்துக்குடி பி.என்.டி காலனி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் புவனேஷ்குமார் (19) ஆகிய இருவரும் லெட்சுமணன் வீட்டுக்குள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் சரவணன் மற்றும் புவனேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூபாய் 1240/- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 13 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் என மொத்தம் 15 வழக்குகளும், புவனேஷ்குமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 12 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










