» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின் சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கம்!
வியாழன் 30, நவம்பர் 2023 5:16:08 PM (IST)

செய்துங்கநல்லூரில் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மற்றும் மத்திய திறனுக்க செயலகம் சார்பில் விவசாயிகளுக்கான மின் சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சியை மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். தொடர்ந்து விவசாயிகள் குத்து விளக்கேற்றினர். தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மின் பாதுகாப்பு மற்றும் மின் திறன் விழிப்புணர்வு பயிற்சி குறித்து செய்துங்கநல்லூர் உதவி மின் பொறியாளர் சுரேஷ்குமார் பேசினார்.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆற்றும் பணிகள் மற்றும் மானியங்கள் குறித்து செய்துங்கநல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் பேசினார். தோட்டக்கலை சாகுபடியில் துல்லியமான சாகுபடி ஈட்டுவது குறித்து கருங்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயந்தனும் பேசினார்.
தூத்துக்குடி ஊரக கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை வரவேற்றார். தூத்துக்குடி உதவி பொறியாளர் பெருமாள் தொகுத்து வழங்கினார். தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் ராம்குமார், தூத்துக்குடி மத்திய அலுவலக உதவி செயற்பொறியாளர்கள் வேலாயுதம், ஆறுமுகம், அப்துல்லா, ஸ்ரீவைகுண்டம் உபகோட்ட உதவிபொறியாளர்கள் ஏரல் ராஜேந்திரன், ஸ்ரீவைகுண்டம் முரசொலிமாறன், ஸ்ரீவைகுண்டம் ஊரகம் சங்கீதா மற்றும் உபகோட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் செய்துங்கநல்லூர், கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உட்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி செயற்பொறியாளர் பொது ரெமோனா நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










