» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியால் தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 3:14:19 PM (IST)
கயத்தாறு அருகே தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் ஆனந்தராஜ் (33) என்பவரது உறவினர் ஒருவருக்கும், கயத்தாறு கிருஷ்ணா காலனியைச் சேர்ந்த கோட்டைசாமி மகன் பாலமுருகன் (19) என்பவருக்கும் தீபாவளி பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆனந்தராஜ் தலையிட்டு அவர்கள் இருவரையும் கலைந்து செல்ல வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று பாலமுருகன் சிவகங்கை மாவட்டம் வி.புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (58) என்பருடன் சேர்ந்து கயத்தாறு ஞானபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆனந்தராஜிடம் அவரது உறவினர் எங்கே என கேட்டு தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் வழக்கு பதிவு செய்து பாலமுருகன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் கருமத்தம்பட்டி மற்றும் போத்தனூர் காவல் நிலையத்தில் தலா ஒரு திருட்டு வழக்கும், மதுரை மாவட்டத்தில் கருப்பையூரணி காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், மதுரை நகரம் கூடல்புதூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 2 வழக்குகளும், சிவகங்கை மாவட்டத்தில் பழையனூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 2 வழக்குகளும், டவுன் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகளும் என மொத்தம் 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










