» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பள்ளி ஆண்டு விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

வியாழன் 30, நவம்பர் 2023 11:29:34 AM (IST)



தூத்துக்குடியில் பள்ளி ஆண்டு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடியில் டி.எம்.என்.எஸ். டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், தூத்துக்குடி மாநகரை தூய்மையாக பரமாரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று பேசினார். மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரியம்மாள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory