» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது!

வியாழன் 30, நவம்பர் 2023 10:22:17 AM (IST)

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது  கருப்பட்டி ஆபீஸ் சொசைட்டி அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். 

அதில் அவர் தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்த கென்னடி மகன் சிம்சன் (28) என்பதும் அவர் அந்த பகுதியில் செல்போரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிம்சனை கைது செய்தனர். பிரபல ரவுடியான சிம்சன் மீது 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory