» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பசுமாடு பலி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 9:37:13 PM (IST)

சாத்தான்குளம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பசுமாடு உயிரிழந்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன் விளையைச் சேர்ந்தவர் முத்து . இவர் ஆடு, மாடுகள் வளர்த்தி வருகிறார். இந்நிலையில் வளர்த்து வரும் பசுமாட்டை அங்குள்ள காட்டு பகுதியில் இன்று மேயவிட்டுள்ளார். மதியம் சென்று பார்த்தபோது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மாடு மின்சாரம் தாககியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்சப்ளையை துண்டித்து மின்கம்பியை சீரமைத்துள்ளனர். உயிரிழந்த மாட்டின் விலை சுமார் ரூ45 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து முத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிககப்பட்ட தொழிலாளிக்கு அரசு நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










