» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி அவலம்: மாணவ, மாணவிகள் கடும் அவதி!
திங்கள் 6, நவம்பர் 2023 11:21:10 AM (IST)

தூத்துக்குடியில் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடியில் பெருமாள் புரம் மெயின் ரோட்டில் நீதிபதி குடியிருப்பு எதிரே உள்ள பிரதான சாலையில் சிறிய மழை பெய்தாலே மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த சாலை உடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழிய செல்லும் வாகன ஓட்டிகள் மழை நீரில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலை பள்ளி, பாரதியார் வித்யாலயம், ஹோலி கிராஸ் மற்றும் மருத்துவமனைகள் உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாதையை கடந்து செல்கின்றனர். சிறிய மழை பெய்தாலும் மழை நீர் தேங்குகிறது. அருகில் மழைநீர் வடிகால் இருந்தும் அதில் மழைநீர் செல்லாமல் சாலையில மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை முறையிட்டும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை உடனடியாக சீரமைக்க போர்க்கால அடிப்படையில் மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் களம் நிகழ்ச்சியில் ரூ.35லட்சம் நலதிட்ட உதவிகள்: கனிமொழி எம்பி வழங்கினார்.
வியாழன் 30, நவம்பர் 2023 8:33:34 AM (IST)

சேவைக் குறைபாடு : ஒப்பந்தகாரர் ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 8:27:49 AM (IST)

மேல்மருவத்தூர் இருமுடி திருவிழாவிற்கு தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி
வியாழன் 30, நவம்பர் 2023 8:15:57 AM (IST)

தூத்துக்குடியில் 269 மாணவிகளுக்கு சைக்கிள் : அமைச்சா் கீதாஜீவன் வழங்கினார்!
வியாழன் 30, நவம்பர் 2023 8:12:18 AM (IST)

கூலி உயர்வு கோரி டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்
வியாழன் 30, நவம்பர் 2023 8:07:04 AM (IST)

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் சரக்கு வாகனம் மோதி தூண்கள் சேதம் : இருவா் காயம்
வியாழன் 30, நவம்பர் 2023 8:01:48 AM (IST)
