» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர், ஒண்டி வீரன் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:34:28 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நெற்கட்டும் செவலுக்குச் சென்று பூலித்தேவர், பச்சேரி வெண்ணி காலடி, ஒண்டி வீரன் ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாட்கள் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதல் நாளான நேற்று குற்றாலத்தில் விவசாயிகளுடன் பங்கேற்ற நிகழ்ச்சி, ஆழ்வார்குறிச்சியில் மண்பாண்ட உற்பத்தியாளர்களுடன் பங்கேற்ற நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி இரவு கோவிந்தப்பேரி ஷோகோ கிராமத்தில் தங்கினார்.
இரண்டாம் நாளான இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கோவிந்தப்பேரியில் இருந்து புறப்பட்டு வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவல் கிராமத்திற்குச் சென்றார். அங்கு மன்னர் பூலித்தேவர் அரண்மனையில் உள்ள மன்னர் பூலித்தேவரின் திருவுருவ சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அருகில் உள்ள பச்சேரி கிராமத்திற்கு ஆளுநர் சென்றார். அங்குள்ள உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, ஒண்டிவீரன் ஆகியோர் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் கலந்து கொண்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










