» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் மாயம்!

வியாழன் 28, செப்டம்பர் 2023 11:21:00 AM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் அன்னை தெரசா காலனியைச் சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் அஜய் சார்வின் (19), மறவன் மடத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25 ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் பின்னர்  மாலையில் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாயார் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்டதி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory