» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதமாற்றம் விவகாரத்தால் மீனவர்கள் மோதல்: 200 நாட்டுப் படகுகள் வேலை நிறுத்தம்!

வியாழன் 28, செப்டம்பர் 2023 10:39:44 AM (IST)

காயல்பட்டினத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 200 நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் கொம்புதுறை கடற்கரையில் இருந்து 200 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்த மதத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2பேர் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்களாம். இதையடுத்து அவர்கள் 2பேருக்கும் மீன்களை ஏலமிட தடை விதித்தாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதையடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை ஒட்டி 200 நாட்டுப் படகுகள் கொம்புதுறை கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ஆறுமுகநேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory