» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)



சாத்தான்குளம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பெருமாள். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அந்த காரில் அவர் சமத்துவபுரத்தில் இருந்து நாசரேத் நோக்கி தனது காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அந்த காரில் முன்பக்கத்தில் இருந்து புகை வெளிவந்துள்ளது. உடனே அவர் காரை நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளார். அப்போது காரில் தீ எரிய தொடங்கியுள்ளது. காற்றின் காரணமாக காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, காரின் முன்பகுதி முழுவதும் எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் மற்றும் சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் சேதம் சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory