» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!

புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் அறுபது வீடு காலனியைச் சேர்ந்தவர் சேவியர் மகன் மைக்கேல் ஜெனிகர் (30). இவர் நேற்று தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். சமத்துவபுரம் அருகே வந்தபோது இவரது பைக் மீது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பலத்த காயம் அடைந்த ஜெனிகரை  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) விஜயலட்சுமி வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த வடக்கு கோவங்காட்டைச் சேர்ந்த சுந்தர் ராஜ் மகன் வெங்கடேஷ் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory