» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட மீனவா்களுக்கு ரூ.32.39 கோடி நிவாரணம் வழங்கல்: ஆட்சியா் தகவல்
புதன் 27, செப்டம்பர் 2023 8:29:18 AM (IST)
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தூத்துக்குடி மாவட்ட மீனவா்களுக்கு இதுவரை மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.32.39 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021 மே 7 ஆம் தேதி முதல் நிகழாண்டு ஆகஸ்ட் வரை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதில், மீன்பிடிப்பு குறைவு காலங்களில் மீனவா்களுக்கு சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 72 ஆயிரத்து 322 மீனவ குடும்பங்களுக்கு ரூ.41.13 கோடி சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீனவா் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின்கீழ் 67ஆயிரத்து 607 மீனவா்களுக்கு ரூ.30.43 கோடி சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீனவ மகளிா் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின்கீழ் 71ஆயிரத்து 647 மீனவ மகளிருக்கு ரூ.31.99 கோடி சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தில் 22 மீனவா்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள், பாரம்பரிய மீன்பிடி கலன்களை இயந்திரமயமாக்குதல் திட்டத்தில் 491 மீனவா்களுக்கு ரூ.1.66 கோடி மானியம், பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மாற்றாக கண்ணாடி நாரிழைப் படகு மற்றும் இதர உபகரணங்கள் வாங்க 42 மீனவா்களுக்கு ரூ.84 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன. மீனவ மகளிருக்கு கடல்பாசி வளா்க்கும் திட்டத்தில் 94 பேருக்கு ரூ.9 லட்சத்து2 ஆயிரத்து 400 மானியம் வழங்கப்பட்டுள்ளது.
குழு விபத்து காப்புறுதி திட்டத்தில் 21 மீனவா்களுக்கு ரூ.95 லட்சம் நிவாரண தொகையும், காணாமல் போகும் மீனவா்களது குடும்பத்திற்கு தின உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 21 மீனவா்களுக்கு ரூ.5.96 லட்சம் தின உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 64, 784 மீனவ குடும்பங்களுக்கு ரூ.32.39 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










