» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பள்ளி மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர்!

புதன் 27, செப்டம்பர் 2023 8:18:13 AM (IST)



ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், மண்பாண்டங்கள், தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம், வெண்கலப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொருட்கள் கண்ணாடி பேழைகளில் வைக்கப்பட்டு, சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சைட்மியூசியத்தை கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். அன்று முதல் இந்த மியூசியத்தை ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். நேற்று காலையில் நெல்லை ரோஸ்மேரி மாடல் பப்ளிக் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியை மாலின் பிரமிளா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சைட்மியூசியத்துக்கு வந்தனர். அவர்கள் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை பார்வையிட்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வு மாணவர் ராஜேஸ் ஆகியோர் அவர்களுக்கு விளக்கமளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory