» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கேக்குகளில் பூஞ்சை: பேக்கரி உரிமம் ரத்து!

புதன் 27, செப்டம்பர் 2023 8:09:20 AM (IST)

தூத்துக்குடியில் கேக்குகளில் பூஞ்சை தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், பேக்கரி உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உள்ள ஆதிரா பேக்கரி கடையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தயாரிக்கப்பட்ட கேக்குகளில் பூஞ்சைத் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த பேக்கரியின் உணவு பாதுகாப்பு உரிமத்தை இடைக்கால ரத்து செய்து, வணிகத்தினை உடனே நிறுத்த உத்தரவிட்டார்.

மேலும், அங்கிருந்த 5 லிட்டர் நெய், 9 கிலோ கேக்குகளும், 2½ லிட்டர் மில்க் ஷேக்குகளும் பறிமுதல் ெசய்யப்பட்டன. நெய்யை உணவு பகுப்பாய்வு செய்வதற்காக, பகுப்பாய்வுக் கூடத்திற்கு விரைவில் அனுப்பப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory