» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு : தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:36:37 PM (IST)

விளாத்திகுளம் அருகே உள்ள கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர்.இவரது ஆட்டுக்குட்டி ஊரில் உள்ள பழமையான சுமாா் 30 அடி ஆழமான கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து ரவிசங்கர் விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 30 அடி ஆழ கிணற்றில் இறங்கி சரியான மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர். நீண்ட நேரம் உயிருக்கு போராடிய ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











எப்படியும்Sep 26, 2023 - 06:34:27 PM | Posted IP 172.7*****