» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எழும்பூர்-திருச்செந்தூர் ரயில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாறுகிறது!
செவ்வாய் 8, ஆகஸ்ட் 2023 5:29:30 PM (IST)
சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் ரயில் வரும் 15ஆம் தேதி முதல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாறுகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயிலை வேகப்படுத்தும் வகையில் வருகிற 15ஆம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாற்ற ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலானது சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் இடையே வண்டி எண். 16105 எனவும் திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையே வண்டி எண் 16106 எனவும் தினந்தோறும் இயங்கி வருகிறது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலின் வேகம் அதிகரிப்பட்டு செந்தூர் சூப்பர் பாஸ்ட் இரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த இரயில் வண்டி எண் 20605 ஆனது சென்னை எழும்பூர்-இரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு திருச் செந்தூர் இரயில் நிலையத் தை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 20606 இரயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8:25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 10:25 மணிக்கு சென்றடையும் என தென்னக இரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











ராமநாதபூபதிAug 28, 2024 - 05:05:58 PM | Posted IP 172.7*****