» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி

சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கீழத்தெருவை சேர்ந்தவர் பிரேமானந்த் (45). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். தற்போது இவர் குடும்பத்துடன் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் மோட்டார் பைக்கில், ஆழ்வார் திருநகரிக்கு சென்றுவிட்டு இரவில் தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 

பொட்டல்காடு விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த கார், அவரது பைக் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த முத்தையாபுரம் போலீசார், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக முத்தையாபுரம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory