» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை

சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த மீனவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி தெர்மல் நகர், வாட்டர் டேங்க் அருகே ஒரு ஆண் சடலம் கிடப்பதாக தெர்மல்நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியை சேர்ந்த உமையணன் மகன் உமையவேல் (33) என்று தெரியவந்தார். 

உமையவேல் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். தினசரி மது அருந்துவாராம். நேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்ததியதில் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory