» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்போனில் வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய 3பேர் கைது
சனி 3, ஜூன் 2023 7:17:40 AM (IST)
மெஞ்ஞானபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் உறவுக்கு அழைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கடாச்சபுரம் முத்துகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் துரைசிங். கட்டிட தொழிலாளி. குடும்ப நண்பரான, அதே ஊரைச் சேர்ந்த சாமுவேல் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதை அதே பகுதி வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த சந்ரு என்ற சந்திரசேகர் (28), முத்துகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த வேதமுத்து (42), ராபர்ட் குமார் (30) ஆகிய 3 பேரும் துரைசிங் வீட்டிற்கு சாமுவேல் வந்து செல்லுவதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் துரைசிங் வீட்டில் இல்லாத நேரத்தில், செல்போன் காட்சியை காட்டி அவரது மனைவியை மிரட்டி பாலியல் உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர், வேதமுத்து, ராபர்ட்குமார் ஆகிய 3பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










