» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழுகுமலையில் வைகாசி விசாகத்திருவிழா: நேர்த்தி கடனை நிறைவேற்றிய பக்தர்கள்!

வெள்ளி 2, ஜூன் 2023 8:35:11 PM (IST)



கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 

தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தினை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல் தென் பழனி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் உள்ள குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

வைகாசி விசாகத்திருவிழாவினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதையெடுத்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தி வந்ததும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory