» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயக்குநர் திடீர் ஆய்வு

வெள்ளி 2, ஜூன் 2023 6:56:10 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கல்வி இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர் திடீர் ஆய்வு நடத்தினார். 24 மணி நேர அவசர மற்றும் தீவீர சிகிச்சைபிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பேறுகால சிகிச்சை பிரிவுகளை ஆய்வு செய்த இயக்குநர், மழைநேரங்களில் தண்ணீர் தேங்க கூடிய இடங்களை பார்வையிட்டு அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மருத்துவ அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் இதுபோன்று திடீர் ஆய்வுகள் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்துவிட்டு சென்றார்.

ஆய்வின் போது, டாக்டர் சிவக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாதன், உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெயமணி மற்றும் டாக்டர்கள் குமரன், சூர்யபிரதீபா உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory