» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெள்ளையத்தேவன் பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை!
புதன் 31, மே 2023 11:46:14 AM (IST)
வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மரியாதை செந்தில்ராஜ் செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 254வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள அண்ணாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வெள்ளையத்தேவனின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமனற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியர் கௌரவ் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவகுமார், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரன், வீரன் வெள்ளையத் தேவன் வாரிசுதாரர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
collectorமே 31, 2023 - 12:53:51 PM | Posted IP 162.1*****