» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
செவ்வாய் 30, மே 2023 3:07:47 PM (IST)
தூத்துக்குடியில் மேலூர் ரயில் நிலையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்திற்கு எதிரே புதிய பஸ் நிலையம் இருப்பதால் சாலையை அகலப்படுத்துவதற்கும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில்வே பணிகள் நிறைவேற்றதால் அப்பகுதியில் இருக்கும் மண் மற்றும் கற்களை உடனடியாக அகற்றி போக்குவதற்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நாட்களில் புதிய சாலை மற்றும் மின்விளக்குகள் அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் உறுதி அளித்தார்.
இதனை அடுத்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டூவிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், தி.மு.க.நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
Balamuruganமே 30, 2023 - 09:33:20 PM | Posted IP 172.7*****
பயன்பெறுவார்கள்.
Balamuruganமே 30, 2023 - 09:29:53 PM | Posted IP 172.7*****
KVK நகர் பாலம் வேலை ஆமைவேகத்தில் நடப்பது தான் மாத
நகராட்சியின் சாதனை? மேயர் அவர்கள் பக்கிள் ஓடை வழியாக புதிய மினி பஸ் இயக்க வழிதடத்தை ஏற்படுத்தினால் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கினால் KVK நகர் ,அண்ணாநகர், மில்லர்புரம், ராஜிவ்நகர்,டீச்சர்ஸ் காலணி, 3ம் மையில், வழியாக கலெக்டர் அலுவலகம் வரை பஸ் இயக்கினால் மக்கள் பெரிதும் பயப்படுவார்கள்.
SivagaminathanJun 1, 2023 - 12:08:08 PM | Posted IP 172.7*****