» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; விஷம் குடித்த நண்பருக்கு தீவிர சிகிச்சை!
வெள்ளி 26, மே 2023 11:47:23 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையில் அவரது நண்பர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் சண்முகராஜா (17). இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதனிடையே சண்முகராஜாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது நண்பரான பேச்சிமுத்து மகன் பொன் இசக்கி (18) என்பவர் விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி பாலாஜி சரவணன் பங்கேற்பு!!
புதன் 31, மே 2023 4:07:25 PM (IST)

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

நல்லமே 26, 2023 - 03:18:43 PM | Posted IP 162.1*****