» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; விஷம் குடித்த நண்பருக்கு தீவிர சிகிச்சை!

வெள்ளி 26, மே 2023 11:47:23 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையில் அவரது நண்பர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் சண்முகராஜா (17). இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  

இதனிடையே சண்முகராஜாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது நண்பரான பேச்சிமுத்து மகன் பொன் இசக்கி (18) என்பவர் விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

நல்லமே 26, 2023 - 03:18:43 PM | Posted IP 162.1*****

அட்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory