» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரி உரிமையாளர் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 12:28:08 PM (IST)
தூத்துக்குடியில் லாரி உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சில்லா நத்தத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (35). இவர் சொந்தமாக லாரி செட் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் இன்று காலை தூத்துக்குடி பண்டாரம்பட்டி சிப்காட் தொழிற்சாலை வளாகத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
நல்லதம்பியின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி மண்டை இரண்டாக உடைந்து பிளந்த நிலையில் கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் "நல்லதம்பிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படவே பல இடங்களில் கடன் வாங்கினாராம். ஆனால் அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லையாம். இதனால் கடன் கொடுத்தவர்கள் வீடுதேடி வந்து பணத்தை கேட்டுள்ளனர். இதனால் அவரது தம்பி முத்துராஜ் (33) என்பவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
அண்ணனை தேடி கடன்காரர்கள் வீட்டுக்கு வருவதால் தன்னிடம் கடன்களை கேட்பார்களோ என்று அச்சத்தில் அண்ணனிடம் தகராறு செய்தாராம். இது சம்பந்தமாக தனது சித்தப்பா குளத்தூர் அருகே உள்ள முத்து குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துராஜ் (28) என்பவரிடம் விவரத்தை தெரிவித்தாராம் இதனால் இரண்டு பேரும் சேர்ந்து நல்ல தம்பியை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து 2பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

என்னApr 2, 2023 - 03:32:05 PM | Posted IP 162.1*****